வியாழன், 3 மே, 2018

கவிஞானி டாக்டர் அ. மறைமலையான் மண்கொண்டார்



கவிஞானி டாக்டர் அ. மறைமலையான் தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு , கண்ணன்தன்குடியில் 08 .07 .1932 ஆண்டு ஐயா சு.து. அய்யாசாமி மண்கொண்டார், முத்தம்மாள் அம்மையாருக்கு மகனாக பிறந்தார் .

இவர் 1953 ஆண்டு முதல் தனது எழுதுகோல் பயணத்தை தொடங்கினார். தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற பாவலர். பேரறிஞர் அண்ணா விருது, கலைமாமணி விருது பெற்றவர்.


இவர் எழுதிய நூல்கள் 50 க்கு மேலே. இவர் தமிழக அரசிடம் இருந்து 'ஒரு தமிழ் பூ தவிக்கிறது" , அண்ணாவின் பெருவாழ்வு என்ற நூல்களுக்கு பரிசும், காட்டு மல்லிகை என்ற நூலிற்கு அனைத்திந்திய வானொலி நாடக போட்டியில் பரிசும் பெற்றுள்ளார்.


நிலவில் பூத்த நெருப்பு என்ற அறிவியல் புதினம், அன்னை தெரசா வாழ்கை வரலாறு, 'ஒரு தமிழ் பூ தவிக்கிறது' காவியம் கல்லூரி, பள்ளி மாணவர்க்கு பாட நூல்களாக உள்ளது.

போர் வாள், போல்ட் இந்தியா, நவமணி நாளிதழ்கள் தலையங்க ஆசிரியர், Guiding Light ஆங்கில இதழின் ஆசிரியர், மக்கள் பாதை மலர்கிறது என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்தார்.


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 1988 இல் நடைபெற்ற உலக கவிஞர் மாநாட்டில் தாம் ஆங்கிலத்தில் எழுதிய 'TREES ARE MY TEACH " என்னும் கவிதைக்கு பாராட்டுப்பெற்றவர்.


உலக தமிழ் எழுத்தாளர் பேரவை, மக்களாட்சி பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகளின் தலைவர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு இலக்கிய பயணம் மேற்கொண்டு ஆய்வுகள் செய்தவர்.


பாவேந்தர் விருதுப் பாவலர் அ.மறைமலையான் ஒரு நிகழ்வில் பேசும்போது - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் முதல் புரட்சி நடிகர் என்றார். அப்பொழுது எம்ஜிஆர் பற்றாளர்கள் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேளையில் - உங்கள் எம்ஜிஆர் மூன்றாவது புரட்சி நடிகர் - எனப் பட்டென்று பதிலளித்தார். அப்படியானால் இரண்டாவது புரட்சி நடிகர் யார் - என ஆவலோடு கேட்டனர். எம்ஆர்இராதா தான் என்றவுடன் ஆவேசப்பட்டவர்கள் ஆமோதித்தபடி அமைதியாகி விட்டனர்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்