திங்கள், 16 ஆகஸ்ட், 2021

மாவீரர் நாராயணன் வாணாதிராயர்

 


INA_Guerrilla_Regiment


நேதாஜியின் முதன்மை பிரிவான S.S Groupக்கிற்கு அடுத்தபடியாக ஐஎன்ஏவின் கொரில்லா ரெஜிமெண்ட் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இயற்கையாகவே நல்ல உடல் அமைப்பும்,அறிவுத்திறனும் கொண்ட கள்ளர்கள், சிறுவயதிலேயே களரி,அடிமுறை,ஆயுதப்பயிற்சி எடுப்பவர்கள். மேலும் ஆங்கில அரசுக்கெதிராக 100 வருடங்களாக தொடர்ந்து நேர்முகமாகவும், கொரில்லா தாக்குதல் மூலமாகவும் போர் செய்திருந்திருந்தனர். ஆகையால் அவர்களுக்கு கொரில்லா ரெஜிமெண்ட்டில் சேவை செய்வது மிகவும் எளிமாக அறியப்பட்டது.

கொரில்லா தாக்குதல் என்பது எதிரிகளின் படை மற்றும் ஆயுதக்கிடங்குகளை திட்டம்தீட்டி, எதிரிகள் கண் இமைக்கும் நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தி, எதிரிகள நிலைகொலையச் செய்து வெற்றி பெறுவதாகவும்.

பெயர்                  : நாராயணன் வாணாதிராயர்
ஊர்                      : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அத்திவெட்டி,
பியரிங் நம்பர்      : 63543
ரெஜிமெண்ட்       : 7th கொரில்லா ரெஜிமெண்ட்

பழந்தமிழ் வாணர் மரபில் உதித்த நாரயணன் வாணாதிரியாருக்கு பல மிஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து வந்துள்ளார். சுமார் இரண்டு வருடங்களாக பல்வேறு கொரில்லா தாக்குதலை நடத்தி, பிரிட்டிஸ் இராணுவத்தை அச்சுருத்தி வந்த வாணாதிராயர்.

கிபி1945ல் பிரிட்டிஸ் படையை  கொரில்லா தாக்குதல் நடத்திவிட்டு வரும் வழியில் பிரிட்டிஸ் அரசின் துப்பாக்கி சூட்டில் மார்பில் குண்டடிபட்டு உயிரிழந்தார்.



கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்