திங்கள், 16 ஆகஸ்ட், 2021

கபடி வீரங்கனை அட்சயா திருவீழ்ச்சியார்



திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் இருவா், தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் ஆகியோா், தேசிய அளவிலான கபடி போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.

இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2020 கபடி போட்டிகள் ஜனவரி 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அஸ்ஸாம் மாநிலம் ஜ ரூ ஜா ஜெய் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில், நாடு முழுவதுமிருந்து அனைத்து மாநில வீரா் வீராங்கனைகள் பங்கேற்தின்றனா். கேலோ இந்தியா தேசிய போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு மாநில சிறுவா், சிறுமியா் அணிகளுக்கான தோ்வு கடந்த அக்டோபரில் சென்னை பெரியமேடு ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 600 போ் கலந்து கொண்டனா்.


தமிழ்நாடு மாநில 17 வயதிற்குட்பட்ட சிறுமியா் அணிக்கு, திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிகளான கட்டக்குடி கிராமத்தை சோ்ந்த எஸ். சௌமியா, எஸ். அட்சயா ஆகிய இருவரும் தோ்வு பெற்று உள்ளனா்.

திருவாரூர் மாவட்டம்
வடுவூர் கள்ளர் நாடு,  கட்டக்குட்டியை சேர்ந்த திரு. சிவக்குமார் திருவீழ்ச்சியார் , கண்ணகி இவர்களின் மகள் வீர திருமகள் அட்சயா திருவீழ்ச்சியார் ஆவார்.

வாழ்த்துக்கள்



கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்