செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

வீரசுந்தர பாண்டிய தேவர் காலத்தில் கள்ளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட நிலம்


கள்ளர் இனத்தவர்கள் இன்று தாங்கள் வாழும் பகுதிகளில் அதிகமான நிலங்களை தங்கள் வசம் கொண்டுள்ளனர். கள்ளர்கள் வெள்ளாளர்களிடம் இருந்து பிற்காலத்தில் தான் நிலங்களை பெற்றனர் என பல எழுத்தாளர்கள் தங்களது கற்பனையை திணித்து உள்ளனர். இத்தகைய கற்பனை வாதங்களை உடைத்தெறியும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் கிடைத்த கல்வெட்டு அமைந்துள்ளது. இந்த கல்வெட்டின் விளக்கத்தை தன்னுடைய " 30 கல்வெட்டுகள் " எனும் புத்தகத்தில் பழம்பெரும் வரலாற்று ஆய்வாளர் வை. சுந்தரேச வாண்டையார் அளித்துள்ளார்.




புதுக்கோட்டை கல்வெட்டு 260:-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் நெய்வாசல் எனும் ஊரில் அகத்தீஸ்வரர் கோயிலில் கிடைத்த கல்வெட்டு வீரசுந்தர பாண்டியதேவர் காலத்தில் கள்ளர்களின் சமூகநிலையை விளக்குகிறது.

கிபி 1222ல் வீரசுந்தர பாண்டியதேவர் காலத்தில் , வெண்ணெய்நல்லூரை சேர்ந்த கூத்தன் தில்லை நாயகன் என்பவன் திருத்தியூர் முட்டத்தாரான வண்டாங்குடி கள்ளர்களிடமிருந்து வண்டாங்குடியையும் அதன் சுற்றுபுறமுள்ள நிலங்களையும் காராண் கிழமையாய் விலைக்கு கொண்டுள்ளார். திருத்தியூர் முட்டம் என்பது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள பெருச்சிக்கோயிலை மையமாக கொண்ட ஒரு பகுதி. திருத்தீயூர் முட்டத்தை சார்ந்த 24 கிராமங்களில் வண்டாங்குடியும் ஒரு கிராமம். வண்டாங்குடியையும் அதன் சுற்றியிருந்த நிலப்பகுதிகளையும் காராண் கிழமையாக( உழுது பயிர் செய்யும் உரிமையை) கள்ளர்களிடம் இருந்து கூத்தன் தில்லை நாயகன் விலைக்கு பெற்றார் எனும் கல்வெட்டு தகவல் மூலம், கள்ளர்களின் வசமே வண்டாங்குடி எனும் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி நிலங்கள் இருந்துள்ளது என்பதை அறியலாம். கள்ளர்களிடம் இருந்த நிலம் உழும் உரிமையை பெற்று, அதற்கு பதிலாக அந்நிலங்களுக்குரிய வரிகளை அகத்தீஸ்வரர் கோயிலுக்கு அளிக்க கூத்தன் இசைந்துள்ளார். இது தவிர குறிப்பிட்ட காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு நெல்லையும் அளிக்க கூத்தன் உறுதி அளித்து, கல்வாயில் நாடாள்வானான கண்டன் ஆளுடையான் என்பவரிடம் கற்பூரவிலையைப் பெற்று அதற்கு சம்மதமும் கொடுத்துள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கல்வாயில் நாடாள்வான் கள்ளர்களின் பிரதிநியாகவோ,கள்ளர் தலைவராகவோ இருக்கலாம். பாண்டிய மன்னர் காலத்திலேயே கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பே சிவகங்கை மாவட்டத்தில் கள்ளர்கள் ஒரு ஊரின் மொத்த நிலப் பகுதியையும் தங்கள் வசம் வைத்திருந்துள்ளனர். கள்ளர்கள் காலங்காலமாக நிலவுடைமையாளர்கள் என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு சிறந்த சான்றாக அமைகிறது.

பாண்டிய மன்னன் பராக்ரமா பாண்டியனின் அதிகாரிகளின் சந்ததியினர் புத்தூர் பாண்டியர்கள்


சோழவளநாட்டில் தஞ்சை பகுதியில் உள்ள அம்மாப்பேட்டை அருகில் உள்ள இராசேந்திர சோழர் காலத்தில் மூலகுடியாகிய திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட ஊர் புத்தூர். அருள்மிகு சவுந்தரநாயகி அம்பாள் சமேத புற்றிடங் கொண்டீஸ்வரர், இங்கு உள்ள பழமையான ஆலயமாகும்.  

முகப்பில் மூன்று நிலை கோபுரம் உள்ளது, அதனை அடுத்து பெரிய மண்டபம் உள்ளது அதில் கொடிமரம் உள்ளது. வலது புறம் கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னதியும் இடது புறம் முருகர் சன்னதியும் உள்ளன.

கருவறை துவிதள விமானமாக உள்ளது. அதில் தென்முகன் லிங்கோத்பவர், துர்க்கை பிரமன் உள்ளனர். பிரகாரத்தில் மேற்கு நோக்கிய மண்டபம் உள்ளது அதில் ஒன்பது கோள்கள் , பைரவர், சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். சூரியனுக்கு தேர் போன்ற ஒரு கருவறை உள்ளது

இறைவன்- புற்றிடம்கொண்டீஸ்வரர்

இறைவி- சௌந்தரநாயகி



புத்தூர் கோவிலில் 2011 ஆம் ஆண்டு திருப்பணிக்கு நன்கொடையளித்த சோழநாட்டு கள்ளர்பெருங்குடிகளின் பட்டங்கள்:-

பாண்டியர்
அஞ்சாத்தேவர்
வாண்டையார்


இதில் உள்ள பாண்டிய பட்டம் உடைய கள்ளர்கள் பாண்டிய மன்னன் பராக்ரமா பாண்டியனின் அதிகாரிகளின் சந்ததியினர் ஆவார்கள்.













ராணி பாரடைஸ் திரையரங்கு உரிமையாளர் திரு. நந்தகுமார் பாண்டியர் ஆவார். மிக பழமையான திரையரங்கு என்றாலும் தஞ்சையின் தற்போதைய சிறந்த திரையரங்கு என்று இதனை தான் சொல்கிறார்கள். சென்னைக்கு சத்யம் தியேட்டர் மாதிரி தஞ்சைக்கு ராணி பேரடைஸ்.


முதலாம் ராஜேந்திரன்-கரந்தை செப்பேடு (கி.பி.1020 ). புத்தூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கரந்தை தமிழ் சங்கத்தில் வைத்து பாதுகாத்தமையால் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. ஐம்பத்தியேழு இதழ்கள் கொண்டவை.





புத்தூர் பகுதியில் வாழ்ந்த ஐயா. சேவு பாண்டியர் என்பவரிடம் இருந்து கரத்தை செப்பேடு கிடைத்தன.

கரந்தை செப்பேடுகள் முதல் இராசேந்திர சோழனால் பிராமணருக்கு அளிக்கப்பட்ட கொடை ஊராகிய திருபுவனமாதேவி சதுர்வேதி மங்களத்தின் தலைமை ஊராகும். கரந்தை செப்பேடுகளில் எட்டாவது ஏட்டின் பத்தொன்பதாவது வரி குறித்திடும் " மூலகுடியாகிய திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்" என்பது இப்புத்துரேயாகும். இச்சதுர்வேதி மங்கலத்தின் ஊர்ச்சபையும் இவ்வூரிலேதான் இருந்துள்ளது. எனவே, இச்சாசனத்தொகுதி ஊர்ச்சபையாரால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது புலனாகின்றது.

இச்செப்பேட்டினை வெளியிட்ட முதல் இராசேந்திர சோழனின் ஆட்சியாண்டு எட்டிலிருந்து ( கி பி 1020 ) இரண்டாம் சோழனின் ஆட்சியாண்டு இருபத்திரண்டு வரையில் ( கி. பி 1168 ) இவ்வூர்ச்சபை தொடர்ந்திருந்தற்குக் கல்வெட்டுச் சான்றுள்ளது.

இதனை,

"ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ 
தேவற்குயாண்டு 22 ஆவது நித்த விநோத வளநாட்டு

வீரசோழ வளநாட்டு பேரமதேயம் ஸ்ரீபுத்தூரான

திருபுவனமாதேவிச் சருப்பேதி மங்கலத்துப் பெருங்குறி

மகாஸவையோம்"
என்னும் கல்வெட்டுத் தொடர்கள் உணர்த்துகின்றன.

கிபி 1320 அளவில் திருபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலத்திலமைந்த சோழநாட்டுப் பகுதிகளில் " பராக்ரம பாண்டியன்" என்பவன் ஆட்சி புரிந்துள்ளான். அவனது பாண்டியநாட்டரசியலதிகாரிகள் புரிந்த அதிகாரத்தின் விளைவாக இப்பகுதி மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. புத்தூருக்கு அருகில் வெட்டாற்றின் வடகரையிலமைந்த "பத்துரில்" அழிந்து புதைந்துள்ள சிவன் கோவில் கல்வெட்டு இதனைக் குறிக்கின்றது.

""ஸ்வஸ்திஸ்ரீ கோமாற பன்மரான திருபுவன சக்கர

வர்த்திகள் ஸ்ரீபராக்ரம பாண்டிய தேவருக்கு ...........

இவ்வூர் மேலை மங்கல வீதியில் வடதுண்டம் கீழ்

சிறகில் ஒரு மனையைப் பற்றி வழக்கு உண்டென்று
இரண்டு கோவிலிலும் பூசை முட்டிக்கிடந்த"


தொடர்ந்து கி. பி. 1325 இல் புத்தூரிற்கு நேர் மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவிலமைந்த "திரிபுவன வீரபுரத்தில் பாண்டிய மன்னன் பராக்ரமா பாண்டியனின் அதிகாரிகள் இப்பகுதி மக்களிடத்தில் பாடிகாவல், மெய்க்காவல், மகமை ஆகிய உரிமை களைப் பெற முற்பட்டுள்ளனர். இந்நிலையில் நிலவுரிமையாளராகிய வைணவர்களோடு பூசல்கள் மிகுந்து, ஒருவரையொருவர் அழிக்கும் கொடுமைகளும், பொருழிவுகளும் நடந்திருக்கின்றன. வைணவர் சிலர் கொல்லப்பட்டதுடன் அவர்கட்குரிய விக்ரம சோழ விண்ணகரமும் அழிக்கப்பட்டுள்ளது.

திருமால் கோயில் கல்வெட்டுகள் கலகத்தின் முடிபாக அமைதிபெற்ற பாண்டி நாட்டத்திகரிகள் நடுக்காவல் பெற்று உறுதி செய்தமையைக் குறிக்கும் கல்வெட்டில்,

"திருக்கோயில் திருமுற்றத்திலுள்ளாரை நலிதல் அரங்க

வரை வெட்டுதல் செய்யக் கடவோமல்லமாகவும்

தங்கள் நாடு தந்தபடி இவ்வூர் பூர்ஷித்த நாள் முதல்

காவல் பேற்றுக்கு முற்பிலாண்டுகள் எங்கள் தேவரை
நோக்க ஒரு அன்னியாயம் அடுத்துச் செய்யமால்
காவற் சொற்படாமல் ........... கடவோமானமைக்குச்
சேனைப் பெருமாளான சோழ சோழமூவரையர்தம்
வாசலிலே பெறவும் படுவோமாக"


என்பர் குறிக்கப்பட்டிருக்கிறது அறியத்தக்கதாகவும். இவாறான குழப்பம் மிகுந்த காலத்திலேயே, பிராமணரின் தான நிலங்களுக்குரிய சாசனமான இச் செப்பேடுகள் பாதுகாக்கும் முயற்சியாகக் கிணற்றினுள் மறைக்கப்பட்டுள்ளன.





கரந்தை செப்பேடுகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரிய அளவில், 57 செப்பேடுகளில் சாசனம் எழுதப் பெற்று ராஜேந்திரன் முத்திரையுடன், அது காணப்படுகிறது. ராஜேந்திரசோழன், தன் தாய் திருபுவனமாதேவி பெயரில், மிகப் பிரமாண்டமான ஏரியை அமைத்ததோடு, அதனருகில் இருந்த, 51 ஊர்களிலிருந்து அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும், 51 ஆயிரத்து ஐம்பது கலம் நெல்லை, பல்வேறு சாத்திரங்களில் உள்ள அறிஞர்களின் உணவுக்காக அளித்தான் என்பதை, அந்த செப்பேட்டு சாசனம் விவரிக்கிறது. அதில், பெரிய ஏரி பற்றிய பல செய்திகளும், சுற்றுப்புற ஊர்களின் நிலஅளவை, பல்வேறு சமயம் சார்ந்த கோவில்கள் பற்றிய விவரங்களும் குறிக்கப் பெற்றுள்ளன.

ஆய்வு: திரு. பரத் கூழாக்கியார்

பாண்டியரின் மிழலைக்கூற்றத்து கள்ளர் தளபதிகள்


மாறவர்மன் சுப்தரபாண்டித் தேவர் கிபி1230ஆம் ஆண்டு திருக்கோளக்குடி கல்வெட்டில் குறிக்கப்பட்ட கள்ளர் தளபதிகள்:-

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - பல்லவரையர்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - கச்சிராயன்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - சேதிராயன் 

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - மாதவராயன்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - அதிகைமார்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - விழுப்பரையர்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - திருநீலதரையன்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - செம்பியத்தரையன்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - முனையத்தரையர்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - கலிங்கத்தரையன்






இதில் விழுப்பரையரை இதே சுந்தரபாண்டியத் தேவர் காலத்திற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளன் விழுப்பரையர் என்றே கல்வெட்டு உள்ளது.

மேற்கண்ட தளபதிகளின் வழித்தோன்றலாக  

சேதிராயர்,
மாதவராயர்,
அதிகைமார்,
நீலங்கொண்டார்,
செம்பியத்தரையர்,
முனையத்தரையர்,
கலிங்கராயர்,
கச்சிராயர் 

என்று இன்றும் கள்ளர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். 

இன்று பல்வேறு தொழில் செய்து வந்தாலும் அவர்தம் குருதியின் அரச,போர்குடி தாக்கம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. 


நன்றி 
தமிழக தொல்லியல் துறை

அன்புடன் 
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

திங்கள், 27 பிப்ரவரி, 2023

திருபுவனம் வரலாறு



திருபுவனம் ஸ்ரீ ரங்கநாதபெருமாள் சந்தனகாப்பு அலங்காரத்தில்

தஞ்சை நாட்டில் கும்பகோணத்துக்கும், திருவிடை மருதுருக்கும் இடையே திரிபுவனம் என்ற ஊர் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் சிறப்புப் ஆ. பெயர்களில் ஒன்று திரிபுவன வீரன் என்பதாகும். அப் பெயரால் அமைந்த ஊர் திரிபுவன வீரபுரம் என்று பெயர் பெற்றுத் திரிபுவன மாயிற்று. அவ்வூரில் சிறந்து விளங்கும் சிவாலயம் குலோத்துங்கனாற் கட்டப்பட்ட தென்று சாசனம் கூறும்.'கட்டுமான முறையில் அது தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருப்பதாக அறிந்தோர் கருதுகின்றார்கள்.

இன்று 'திருபுவனம்' என்னும் பெயருடன் சிற்றூராகக் காட்சியளிக்கும் இவ்வூர் பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் ஒரு சிறந்த நகரமாக இருந்திருக்கிறது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் ராசேந்திர சோழன் செப்பேடுகளிற் குறிக்கப்பெற்றுள்ள வெண்ணிக் கூற்றத்துள் அடங்கிய ஊர்.

இவ்வூருக்கு வடக்கு எல்லையாக வீரசோழ வடவாறும், தெற்கு எல்லையாக பறவை ஏரி என்னும் பகுதியும் அடைவாயாக அமைந்துள்ளன. இப்பகுதியினுள் எங்கு பார்த்தாலும் சைவ வைணவச் சின்னங்கள் ஆங்காங்கு வரப்பிலும் வாய்க்கால்களில், தரிசிலும் சிதைந்து கிடைக்கும் சிற்பங்களுள், பறவை ஏரி என்னும் பகுதியின் வடபாலுள்ள பெரியதொரு ஆலின் கீழ் வறிதே நிற்கும் ஐந்தடி உயர அளவில், மிகப்பொலிவுடன், அமர்ந்த பாங்கிலுள்ள திருமால் திருமேனியும் குறிப்பிடத்தக்கவாம். 

இத்திருமேனிகள் ஊரினுள்ளிருக்கும் குளமொன்றிற் கிடந்தது எடுக்கப்பெற்றனவாகத் தெரிகிறது.



திருபுவனம் பஞ்சயாத்து தலைவர் கள்ளர் மரபை சேர்ந்த குருமூர்த்தி சாம்பலாண்டியார் 











இங்கு உள்ள கள்ளர் பட்டங்கள் 

1 ) தென்கொண்டார்
2 ) வாண்டையார் 
3 ) சாம்பலாண்டியார் 



இவ்வூரைப்பற்றிய ஒரு சில இன்பச்சுவை பொதிந்த நாட்டுப்பாடல்களில் " திருபுவனம், எண்பது வீதிகளைக்கொண்டது " என்று கூறப்பெறுவதாலும், கல்வெட்டினுள் " நகரம் திரிபுவன வீரபுரம் " என்று குறிக்கப்படுவதாலும், இவ்வூர் பெருநகரமாக இருந்த உண்மை புலனாகிறது. இவ்வூர் நகரமாக இருந்த காலத்தில் வீரசோழ வடவாற்றின் கரையில் சிவன் கோவிலும், ஊர்நடுவே திருமால் கோயிலும் தெற்கே ஐயன் கோயிலுடன், பிடாரி கோயிலும் இருந்திருக்கின்றன. 




இவைகள் இன்று முழுவடிவில் காணக்கிடைக்கவில்லை. சிவன் கோயில் சிதைவுண்டபின்ன்னர், ஆற்றின் அழிவால் புதைந்து கிடக்கின்றது. திருமால்கோட்டம் இருந்த இடமென்பதற்கறிகுறியாகத் திருசுற்று மதிசுவரில் சில பகுதிகளும், கருவறையின் அடித்தளமும் எஞ்சி நின்று காட்சி தருகின்றன. இக்கோயிலே மேற்குறித்த காலகட்டத்திற்கு இலக்காகிச் சிதைந்த விக்கிரம சோழ விண்ணகரமாகும். இச்சிதைந்த பகுதி பிற்காலத்தில் ஆற்றின் அழிவுக்கும் உள்ளாகியுள்ளதுள்ளதென்பதைச் சூழ்நிலையால் அறிவியலுமாகிறது. 

இவ்விண்ணகரத்தினுள் விளங்கிய பெருமாலும், திருமகளும் புதைந்து சீர்கெட்டுக் கிடந்ததைக் கண்ட ஊரார் , சில ஆண்டுகளுக்கு முன்னர் அத்திருமேனிகளை எடுத்து கோயில் திருமுற்றத்திலேயே கீற்றுக் கொட்டகையிட்டு அமைத்தனர். கீற்றுக் கொட்டகை தற்போது மங்களூர் ஓடாக மாற்றம் பெற்றிருக்கிறது.


மங்களூர் ஓடு போட்ட கொட்டகைக்குள் ஒன்பதடி அளவில் நெடிதாக அரிதுயில் கொண்டுள்ள பெருமாள் திருமேனியும், நான்கடி அளவில் அமர்ந்த நிலையிலுள்ள திருமகள் திருமேனியும் சிற்பத்தால் சிறந்து உயிர்ப்புடன் விளங்குகின்றன. இச்சிதைந்த கோயிலுக்குள் கிடந்த நரசிங்கமூர்த்தி, இராமபிரான், சீதா பிராட்டியார் ஆகிய தெய்வத் திருமேனிகளுடன், நம்மாழ்வார், இராமானுஜர், இரண்டு சேனை முதல்வர்கள் ஆகியோருடைய படிமங்களும் ஒரு சேர எடுக்கப்பட்டு மூலவருடனேயே வைக்கப்பட்டுள்ளனர்.





பிற்காலச் சோழர் காலத்தின் ஒரே கலையமைப்பு கொண்ட கோயில்களாக தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களைக் கூறுவர்.

இரணியனை அழித்த நரசிம்மத்தினை இறைவன் சரபமூர்த்தியாக வந்து அடக்கிய தலம் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில். வரகுண பாண்டியன் தனக்கு நேர்ந்த பிரமகத்தி பழி நீங்கிச் செல்லுங்கால், அப்பழி பின்னும் தொடருமோ என, அவனுக்கு உண்டாகிய நடுக்கத்தைத் தீர்த்து வைத்தமையால் சுவாமிக்கு கம்ப ஹரேஸ்வரர் என்று பெயர். (கம்பம் - நடுக்கம்).

கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.

ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.


இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.

அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.

சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.

இது சரபேஸ்வரருக்குரிய சிறப்பு வாய்ந்த தலமாகும்.  கலைச் சிறப்புடைய சிற்பங்கள் இங்கு உள்ளன.  சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது.  சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள்.





போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்



திருபுவனம் திருக்கோவிலில் மூன்றாம் குலோத்துங்க சோழன் நினைவுகளுடன் ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியர்





















நன்றி  : 

வித்துவான், சி .கோவிந்தராசன் ,
விரிவுரையாளர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சை

முனைவர் ஜம்புலிங்கம் 

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்