சனி, 25 ஏப்ரல், 2020

மாமனிதர். M.R. சுவாமிநாத மழவராயர்



புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டம், முதுகுளத்தில் பூத்து அரியாணிப்பட்டியில் அனைத்து மக்களையும் அரவணைத்து அறம் செய்து வாழ்ந்த மாமனிதர். M.R. சுவாமிநாத மழவராயர்.



கந்தர்வகோட்டையை கட்டமைத்த சிற்பி. கந்தர்வகோட்டையை தாலுகா, மற்றும் ஒன்றியம் என தரம் உயர்த்தப்படக் காரணமானவர்களில் ஒருவர். கந்தர்வகோட்டையின் "Godfather" என்று சொல்லத்தகும் மாமனிதர்.

புதுக்கோட்டை மாவட்ட MGR கால அரசியலில் தவிர்க்க முடியாத மக்கள் சக்தி ஒன்றியப் பெருந்தலைவர் தெய்வத்திரு. M.R. சுவாமிநாத மழவராயர் அவர்களின் 24 ஆம் ஆண்டு (11.05.2020) நினைவஞ்சலி தினத்தில் அவர்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்கி புகழஞ்சலி செலுத்துவோம்.



2020 ஆம் ஆண்டு கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு தலைவராக அதிமுக வேட்பாளர் ரெத்தினவேல் என்ற M.R.S. கார்த்திக் மழவராயர் வெற்றி பெற்றுள்ளார்.