வியாழன், 6 ஆகஸ்ட், 2020

சிங்கப்பூர் SR சந்திரன் மழவராயர்

 
MR. சிங்கப்பூர் SR சந்திரன் மழவராயன் அவர்கள் தன்னுடைய பழைய நிகழ்வுகளை பற்றி கூறுவது :

சுதந்திர போராட்ட வீரர் அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர், தீண்டாமை ஒழிப்பில் அவ்வளவு வேகம் காட்டியவர் அரியின் பிள்ளைகள் என்பார். அந்த மக்களை வீட்டினுள் அழைத்துவந்து நாங்கள் எல்லோரும் உணவு உண்போம். 12 வயதில் சிங்கப்பூர் சென்றேன், அங்கு படிக்கும்போது உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொண்டு, எனது முதல் தேசிய போட்டி Jnr Mr Singapore - 1962 ல் போட்டியில் கலந்து கொண்டேன்.

 




மொத்த போட்டியாளர்கள் 38, மிகப்பெரிய கூட்டம், அமைப்பாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 5 இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். போட்டி New world Entertainment Centre ல் நடைபெற்றது.

ஏற்கனவே Mr Singapore ஆக இருந்த திரு. ராமச்சந்திரனை நான் சந்தித்தேன். அப்பொழுது நான் வெறும் 20 வயது இளைஞனாக இருந்தேன். நான் அந்த போட்டியில் வெற்றி பெற்றேன். இன்று எனக்கு 78 வயதாகிறது.

நான் Mr Singapore 1967 பட்டம் பெற்று, Mr Universe 1967 போட்டியிலும் கலந்துகொண்டேன்.

ஏர் இந்தியாவில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தேன், பல மக்களை சந்திக்கவும் தொண்டு செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் என்னை ஏர்போர்ட் சந்திரன் என்ற பெயர் மேலோங்கி SR சந்திரன் மழவராயன் என்ற பெயர் அதிகம் அறியப்படவில்லை.

73 வயதில்

Essar Chandran Mazhavarayar bodybuilding achivements in the 60s

1962 Jnr Mr Singapore Winner
1963 Snr Mr Singapore 3rd place
1964 Snr Mr Pestasukan 2nd place.
1965 Snr Mr Singapore 2nd Place
1966 no competition
1967 Snr Mr Singapore Winner




இந்திரமோகன் மழவராயர்

SR சந்திரன் மழவராயன் அவர்களின் மகள் அனித்தா மற்றும் மகன் இந்திரமோகன் மழவராயர் ஆவார். இவர் சிங்கபூரில் பணி செய்கிறார். On 26th April 2015 KINDS FAMILY (Kallar Sangam Singapore) had their AGM. Chartered Accountant R Indramohan Malavar was unanimously elected as Secretary for next two years.


 

அத்திவெட்டி ஆனந்தவள்ளியம்மன் சித்திரை திருவிழாவில், இவர் குடும்பத்தினர் (பெரிய மழவராயன் கறை) மண்டகப்படி நடைப்பெறும். மற்றும் 8 கறை வகையராக்களும் பங்கேற்பர்.

ஆனந்தவள்ளி அம்மனுக்கு பெரிய மழவராயர் உபயத்தன்று அபிஷேகம் ஆராதனையும் மிக சிறப்பாக நடைபெறும். கரை தலைவர் லெட்சுமணன் மழவராயர். நான்கு வகையான பிரசாதமும் வழங்கப்படும்.


சிங்கப்பூரில் 13.04.2015 அன்று நடைபெற்ற தமிழ்மொழி 2015 அண்ணாமலை பல்கலை கழக முன்னாள் மாணவ குழுவினரால் நடத்தப்பட்டது. அதில் திரு எஸ்ஸார் சந்திரன் மழவராயர் அவர்கள், திரு .சுப்பிரமணியம் கூர்சார் அவர்கள் , திரு .குடவாயில் பாலசுப்பிரமணியம் சோழகர் கலந்துகொண்டனர்.