புதன், 24 ஜூன், 2020

வீரர் கந்தசாமி சாளுவர்


என் பெற்றோர்களின் திருமணம் கூடநாணல் சக்கரை நாட்டார் இல்லத்தில் நடைபெற்றதாகவும், அதற்கு அப்போதைய தஞ்சை  நாடாளுமன்ற உறுப்பினர் சிங்காரவடிவேலு தலைமை தாங்கினார் என்றும் கூறுவார்கள் ..யார் அந்த சிங்காரவடிவேலு என்ற தேடல் என் மனதில் துளைத்தெடுத்து கொண்டே இருந்தது அதற்கான விடையை இன்றைய வாசிப்பில் கண்டேன்.!

ஆம் ஐயா ! சிங்காரவடிவேலுவின் தாத்தா ஒரு விடுதலை போராட்ட வேங்கை;
1939-ம் ஆண்டில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போட்டியிடுவதாக அறிவித்து களம் காண்கிறார். நேதாஜியை எதிர்த்து காந்தி களம்காண எண்ணினார். காந்தி,நேரு அவர்களை சந்தித்து தான் போட்டியிட வேண்டிய அவசியத்தை கூறி தன் பெயரை முன்மொழியக்கூறினார்.இதனை ஏற்காத நேரு மெளலானா ஆசாத் பெயரை முன்மொழியக்கூறி,மெளலானா ஆசாத் நேதாஜியை எதிர்த்து போட்டியிட மறுத்து, அதன்பின்னர் காந்தியார் தன் வேட்பாளராக ஆந்திர மாநிலத்தை சார்ந்த பட்டாபி சீத்தாராமையாவைக் களத்தில் இறக்கினார்.

* அக்காலகட்டத்தில் நேதாஜியின் நம்பிக்கைக்குரிய களமாடும் வேங்கையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து வாக்கு சேகரித்தார்..

*ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அப்பொழுது மூவருக்கு வாக்களிக்கும் தகுதி இருந்தது.. ஒன்று பூண்டி ஶ்ரீமான் கிருஷ்ணசாமி வாண்டையார் (துளசிய்யா வாண்டையாரின் தந்தை)...அடுத்து சிங்காரவடிவேலுவின் தாத்தா கந்தசாமி சாளுவர், மற்றொருவர் பெரியகோட்டை ஜமீன் தியாகராஜ சோழகர் ...தேவரை அப்போது இவர்களை சந்திக்க அழைத்து வந்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாத்தா கோபாலசாமி நாயக்கர்.

*சோழநாட்டில் நேதாஜிக்கு இரண்டு வாக்குகள் கிடைக்கின்றன ஒன்று திருவாளர்.சிங்காரவடிவேலுவின் தாத்தா கந்தசாமி சாளுவர் அளித்த வாக்கு மற்றொன்று பெரியகோட்டை ஜமீன் தியாகராசர் சோழகர் அளித்த வாக்கு.

அப்பொழுது சர்வ வல்லமை பெற்றவராக திகழ்ந்த காந்தியையே எதிர்த்து நேதாஜிக்காக வாக்களித்த சிங்காரவடிவேலுவின் தாத்தா ஒரு போர்வீரர் எனலாம்.... அவர்மரபுவழித்தோன்றல்தான் தியாகச்செம்மல் சிங்காரவடிவேலு சாளுவர்.

ஒரு இடைத்தேர்தல் மற்றும் மூன்றுமுறை (1980,84,89) தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தவர் அரசியல் வித்தகர் ,மனிதநேய மாண்பாளர் சிங்காரவடிவேலு சாளுவர். இக்கால அரசியலில் தன்னால் நிலைக்க முடியாக என உணர்ந்து விலகி தனித்துவம் காத்தவர் சிங்காரவடிவேலு சாளுவர் அவர்கள்.

என்றும் அன்புடன்

இ. பரத் கூழாக்கியார்