வெள்ளி, 13 மார்ச், 2020

கள்ளரும் வலையர் சமூகமும்



தொண்டைமான் அரசர்கள் வேட்டைக்கு செல்லும் போது வேட்டை சமூகமான வலையர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர். மற்றும் அரசரின் வனப்பகுதிகளையும் பாதுகாத்துள்ளனர்.


அதன் மூலமாக பல நிலங்களை, அரசரிடமிருந்து இனாமாக பெற்றுள்ளனர்.

ஆரம்ப காலத்தில் இருந்தே அரசருடன் நல்ல உறவு முறையில் வலையர் சமூகம் இருந்துள்ளது.

இன்றும் புதுக்கோட்டையில் பல கோவில்களில் தொண்டைமான் அரசரால் காவலுக்கு வைக்கப்பட்ட வலையர்கள் இன்றும் கோவில் காவல் பணியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




தஞ்சை மாவட்டம் ஆம்பலப்பட்டு கிராமத்தில் "செல்லையா நினைவு குழு" நடத்தும் 53 ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடக்கிறது. 

இந்த போட்டியை நடத்தும் குழுவினர், அணியினர் அனைவருமே "கள்ளர்"சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆனால் அந்த "செல்லையா"மட்டும் வலையர் சமூகத்தை சேர்ந்தவர்,

53 வருடங்களுக்கு முன்பு இந்த கிராமத்து அணிக்கு கோல்கீப்பராக இருந்தபோது மாரடைப்பால் காலமானார் செல்லையா அன்று முதல் அந்த கிராமத்து அணியின் பெயராக இன்றுவரை தொடர்கிறார்



நன்றி
The hollow crown 👑 by Nicolas B. Dirks 

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு