திங்கள், 13 ஜனவரி, 2020

சித்தர்கள் கள்ளர்






சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர். அவர்கள் வருமாறு;-

திருமூலர்
இராமதேவ சித்தர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வால்மீகி
கமலமுனி
போகர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்தி தேவர்
போதகுரு
பாம்பாட்டி சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்தர்
குதம்பைச்சித்தர்
கோரக்கர்


இவர்களில் கோரக்கர், பதஞ்சலி இருவரும் கள்ளர் குடியில் பிறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.