புதன், 13 மார்ச், 2019

வித்வான் வடிவேல் சோழகர் . 1909 - 1980


தஞ்சை மாவட்டம் புதைகரை என்னும் சிற்றூரில் திரு அப்புசோழகர் பெரிய வீட்டாயி அம்மாளுக்கும் 22/07/1909 ல் வடிவேலனார் பிறந்தார். தஞ்சைத் திரு நகரில் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். கல்வியில் திருவையாறு அரசர் கல்லூரியில் வித்வான் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதர் பயிற்சியும் பெற்றார். திருக்காட்டுப்பள்ளியில் தமிழ்வேள் உமாமகேசுவரனரர் தலைமையிலும், திரு பன்னீர்செல்வம் முன்னிலையிலும் 1933ல் நாரயணசாமி நாட்டார் மகள் செல்வி இரஞ்சிதத்துடன் திருமணம் நடைபெற்றது.

தஞ்சை கல்யாணசுந்தரம் உயர்நிலை பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராக 39 ஆண்டுகள் பணியாற்றிய பெருமை படைத்தவர். இதனை அடுத்து தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பதிபியல் செயலராகவும் கரந்தை தமிழ் சங்கத்தில் மன்ற உறுப்பினராகவும் தமிழாசிரியர் கழகத்தில் செயலாலராகவும் தஞ்சை மாவட்ட ஆசிரியர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் கள்ளர் மகா சங்கத்தில் அமைப்பாளராகவும்
தஞ்சை கம்பன் கழகத்தில் உறுப்பினராகவும் இராணிவாய்க்கால் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் 
பல்வேறு பதவிகளை திறம்பட நடத்திய பெருமைகளையும் உடையவர்.


மேலும் பல்லவ மன்னர்கள், இலக்கணவிளக்கம், திருக்குறள் உரை, விஞ்ஞான மேதைகள், செந்தமிழ்செல்வம், தமிழ்மணிக்கோவை, பைந்தமிழ் இலக்கணம், வடிவேலன் வழிகாட்டி என்ற நூகளையும் தமிழ்மண்ணில் இயற்றி பதிபித்துள்ளார். சோழகர் என்றாலே அது வடிவேல் சோழகரைத் தான் குறிக்கும் என்ற அளவுக்கு வாழ்ந்து காட்டியவர் வடிவேலனார்.

அடக்கமான தமிழ்பணி, அமைதி, புன்சிரிப்போடுகூடிய நிதானம்,படபடப்பு இல்லா நெறி, ஆடம்பர உடை அணியா போக்கு, எப்பணியுலும் ஒரு தெளிவு இவையே இவரின் அடையாளமாக இருந்தன. தமிழாசிரியர்கள் முன்னேற்றம் எய்திட வழிகள் பல கண்ட பெருமக்களில் இவர் குறிப்பிடதக்கவராவார். தமிழாசிரியர்கள் இடையே நிலவிய தாழ்வு மனப்பான்மை நீங்கவும் ஆசிரியர்கள் உலகில் தமிழாசிரியர்கள் தலைநிமிர்ந்து வலம் வரவும் இவர் வழிகாட்டியுள்ளார். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலைய மதிப்பியல் செயலராக பொறுப்பேற்று ஆற்றிய சீரிய பணியும், தமிழ் உணர்வை வளர்த்த பெருமைக்குரிய கரந்தைத் தமிழ்ச்சங்க வளர்ச்சியில் இவர் கொண்டிருந்த ஆர்வமும் எந்நாளும் நினைவில் நிற்பன.

தஞ்சையில் கள்ளர் மகாசங்கம் பிறப்பதற்கு காரணரும் பல்லாயிரக்கனக்கில் வீறுகொண்ட கள்ளர் மாணவச்செல்வங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை முதுபெரும்புலவரும், வித்துவான் வடிவேல் சோழகரையே சேரும். அவ்ர் அடி தொடர்ந்து நடப்போம்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்