செவ்வாய், 9 அக்டோபர், 2018

உஞ்சினி, ஆனந்தவாடி செப்பேடுகள்‌


காலம்‌ : மல்லிகார்ஜுனராயர்‌, சக வருஷம்‌ 1385, இ.பி. 1463. 

இடம்‌ : உஞ்சினி பெருவழியப்பர்‌ ,கோயில்‌ தர்மகர்த்தா திரு.சாமிநாத படையாச்சியிடம்‌ உள்ள செப்புப்பட்டையம்‌. 

செய்தி : வில்லவராயர்‌ என்பவர்‌ இப்பகுதியின்‌ நிருவாக அதிகாரியாக இருந்த  போது பஞ்சவராயர்‌, வள்ளையார்‌, அங்குராயர்‌, பக்கமழகியார்‌ ஆகிய நான்கு பேர்களுக்கு காணியாட் சியாக நிலம்‌, வீட்டுமனைகள்‌ கொடுக்கப்பட்டன. அவை சானைக்குறிச்சி, சென்னிவனம்‌, இராச கம்பீரபுரம்‌, உஞ்சினி ஆகிய ஊர்களில்‌ இருந்தன. பெருவழியப்பார்‌ கோயில்‌ முதல்‌ மரியாதை உள்ளிட்ட உரிமைகளும்‌ கொடுக்கப்‌ பட்டுள்ளதைத்‌ தெரிவிக்கிறது. 

மல்லிகார்ஜுனராயர்‌ தன்னை இதில் வன்னிய குலகாலன்‌ என்று குறிப்பிடுகிறார். 

வில்லவராயர்‌, பஞ்சவராயர்‌, வள்ளையார்‌, அங்குராயர்‌, பக்கமழகியார்‌ என்ற கள்ளர்  குடும்பங்கள் இன்றும் தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதியில் உள்ளனர்.





வில்லவராயர்‌ பட்டமுடைய  கள்ளர்கள் வாழும் திண்டுக்கல்



அங்கராயர் பட்டமுடைய  கள்ளர்கள் வாழும் புதுக்கோட்டை வத்தனாக்கோட்டை அங்குராப்பட்டி







வள்ளையார்‌ பட்டமுடைய  கள்ளர்கள் தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு வட்டாரத்தில் அமைந்துள்ளது கண்ணுகுடி மையம்











பஞ்சவராயர் பட்டமுடைய  கள்ளர்கள் புதுக்கோட்டை பாலண்டாம்பட்டி 





வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்