செவ்வாய், 30 அக்டோபர், 2018

பொ. ஆ 1745 இல் தஞ்சை கள்ளரிடம் இருந்து மாறுவேடத்தில் தப்பித்து ஒடிய மராட்டிய படையினர்



பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவாளனாகிய சந்தாசாகிபு கி.பி.1739  இல் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் சாகுஜியைக் கைது செய்து, துக்கோஜியின் ஐந்தாவது மகனாகிய பிரதாப் சிங் என்பவரைத் தஞ்சை அரியணையில் ஏற்றினான். பிரதாப் சிங் காலத்தில் தான் தஞ்சை உள் நாட்டு விவகாரத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் தலையிட ஆரம்பித்தார்கள்.

கிபி 1745 ல், மராத்தியரின் சதாரா இராச்சியத்தின் மன்னரின் படை தளபதி முராரி ராவ் தலைமையில் திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளை தாக்கியது. மராத்தியர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து தங்களது சூரையாடலை தொடங்கினர்.

கிபி 1745ல் மார்ச் மாதம், ஆவூரில் இருந்த பாதரியார்கள் மற்றும் கிறிஸ்தவ மத பரப்புரை செய்பவர்கள் மராத்தியரிடம் இருந்து தப்பித்து , தஞ்சையிலுள்ள குண்ணம்பட்டி கிராம கள்ளர்களிடம் சரணடைந்தனர்.



புதுக்கோட்டை சமஸ்தான எல்லையில் உள்ள மலையடிப்பட்டி கிராம மக்கள் தங்களது ஆடு மாடுகளுடன் நார்த்தாமலை பக்கம் சென்று விட்டனர்.

ஒரு மாதம் கழித்து திருச்சியில் இருந்த முகாலயர்கள், மராத்தியரை தாக்க தொடங்கினர். இதே சமயத்தில் கள்ளர்களும் மராத்தியபடையை தாக்கினர். மராத்திய படையின் படைபற்றுகளை சூரையாடினர்.

கிட்டதட்ட 3000 மராத்திய குதிரை படை வீரர்கள் கள்ளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தனர். மராத்தியபடையின் போர்கருவிகள் கள்ளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

கள்ளர்களின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு , கள்ளர்களிடம் மீண்டும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாறுவேடமிட்டு நடைபயணமாக தங்களது சதாரா நாட்டிற்கு தப்பி ஒடினர்  சதாரா இராச்சியத்தின் மராட்டியர்கள்.

மராட்டிய மன்னர் பிரதாப் சிங்  1758 - கள்ளர்கள் துணைக் கொண்டு பிரஞ்ச் கூட்டுப்படைகளை வெற்றிக்கொண்டதை நாம் அறிந்ததே 

நூல் : General history of Pudukkottai State R iyar pg 86

ஆய்வு : உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்