புதன், 20 டிசம்பர், 2017

புற்றில்கழிந்தான், மண்வெட்டியில்கூழ்வாங்கி மற்றும் பாப்புரெட்டி

சில வேறு சமூகத்தை சேர்ந்த சில தற்குறிகள் நமது கள்ளர் பட்டங்களான புற்றில்கழிந்தான் மற்றும் மண்வெட்டியில்கூழ்வாங்கி பற்றி கேவலமாக சொல்லிவருகிறார்கள்

அந்த தற்குறிகளுக்கு சொல்லும் விளக்கம் :

புத்திகழிச்சசோழன்

பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன் (அறிவு மிகுந்தசோழன்)  புத்தூர் என்னும் தேவார சிவ தலத்தையும், புத்தபுரம், புத்தகுடி, புத்தமங்கலம், புத்தங்கோட்டம் என்னும் ஊர்களையும் புத்தாறு என்னும் சிற்றாற்றையும் இவன் ஆட்சியில்  உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் புத்திகழிந்தான்  என்னும் பட்டங்களை கொண்டனர். பின்பு இது மருவி புற்றில்கழிந்தான் என்று அழைக்கப்பட்டுவருகிறது.

தமிழ் அகராதியில் :

புத்திகழிச்சசோழன் : புத்தி (அறிவு) + கழி (மிகுந்த) + சோழன்

(கழிந்தான் என்றால் மலம் கழிப்பது என்று நினைத்த அவர்களின் அறிவு)


மண்வெட்டிக்கூழ்வாங்கி :

செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூழைமன் சோழன் பூமியில் மண்ணை வெட்டி, ஆராய்ந்து பொன்மணலைக் கண்டறிந்து உருக்கிப் பொற்கட்டி (பொற்பாளம்) செய்தவன். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டிகூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் ) இவன் மணலை அள்ளியதால் கூழையாறு என்ற ஒரு சிற்றாரும் உருவாயிற்று. இவன் மரபினர் கூழையன், கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி (மண்வெட்டியில்கூழ்வாங்கி) என்ற பட்டங்களை பெற்றனர். மண்வெட்டியில் கூழ்வாங்கி திரிபு பட்டங்களை கொண்டுள்ளனர்

.Cuzam Cocom AD 1396-1401 – தமிழில் கூழம் கக்கம் > கூழன் கக்கன் என்பது செப்பமான வடிவம். ஒரு Hittite மன்னன் பெயர் Huzziya I 1530-1525 BCE – தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். கூழைமன் ஒரு சோழ அரசன் பெயர். கூழ்பான் தண்டலம் (திருக்கழுக்குன்றம்) ஓர் ஊர்.

Hool Cocom AD 1406-1410 – தமிழில் கூல கக்கம் > கூலன் கக்கன் என்பது செப்பமான வடிவம். இன்றும் வழங்கும் தமிழ்ப் பெயர். சிந்து முத்திரை M2141 இல் பதிவாகி உள்ளது, IsD பக். 230.

தமிழ் அகராதியில் :

கூழ்
kūḻ   n. குழை¹-. kūra. [T. kūḍu,K. M. kūḻ, Tu. kūḷu.] 1. Thick gruel, porridge,semiliquid food; மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை. (திவா.) 2. Food; பலவகையுணவு. கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்(புறநா. 70, 7). 3. cf. kuḍ. Growing crop; பயிர் (திவா.) 4. cf. kōša. Wealth; பொருள் கூழுங்குடியு மொருங்கிழக்கும் (குறள், 554). 5. cf. kuš.Gold; பொன் (திவா.)  
கூழ்













(கூழ் என்றால் சோறு வாங்கியது என்று நினைத்த அவர்களின் அறிவு).

நாயக்கவடியார்

நாயக்கன் + வடியார்
நாயக்கன் என்பது ஒரு தலைமை உத்தியோகஸ்தன் என்பதை குறிக்கும் 

வடியார் என்பது உடையவர் என்பதை குறிக்கும்

"திறங்கொண்ட வடியார்" (தேவா).  திறம் - பெருமை - வன்மை - முதலிய எல்லாம் உடையவர். 

வடியார் கரம் - அழகு பொருந்திய கை

நாயக்கவடியார் என்பது ஒரு தலைமை உத்தியோகஸ்தர் என்பதை குறிக்கும் என்னும் இதனை தெளிவாக ஆராய்ந்தால் பல உயரிய பொருள் தரும். ஆனால் நாயக்கவடியார் என்பதனை  நாய் கடி வாங்கியவர் என்று பொருள் கூறும் தற்குறிகளை என்ன சொல்வது.  

உத்திரமேரூர்க் கல்வெட்டில் ஊர்ச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்கள் 'திருவடியார்' எனப்பட்டனர். அவர்களைக் கொண்ட ஊர்ச்சபை 'மகாசபை' எனப்பட்டது.  

பாப்புரெட்டி :

சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாப்பனசோழன். பாப்புநகரம் என்ற நகரத்தை உருவாக்கி தெற்குக்கோட்டை, வடக்குக்கோட்டை என்று இரு பகுதிகளாக பிரித்து இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி என்னும்  திரிபு பட்டங்களை கொண்டுள்ளனர். வேலூருக்கு அருகில் உள்ள பாப்புரெட்டிப்பட்டி, தருமபுரிக்கு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களின் அடியாகத் தோன்றியவைகளாகும். இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். (மண்ணுக்காக நடந்த மிகப் பெரிய யுத்தத்தின் கதைதான் மகா பார் அதம். மகா என்றால் பெரிய, பார் என்றால் நிலம் அல்லது பூமி, அதம் என்றால் போர்)  இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.


கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவருடைய பட்டம் பாப்புரெட்டி

குறிப்பு:

இப்போது பல ஊர்கள் பெயர்கள் மருவியது. அதற்கு ஒரு உதாரணம்

தண்செய் என்பதுதான் தஞ்சை ஆனது.  இப்படி பல பட்டங்களும் மருவியது.

பழமொழி : அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்...

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி சொல்வது போல தமிழ் மொழியின் உண்மை பொருள் தெரியாமல் பிதற்றி வருகிறார்கள் சில தற்குறிகள்.    

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்